ஜப்பானில் ஷின் - கனுமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயிலில் பயணித்த சுமார் 50 பயணிகள் உட்பட சம்பவ இடத்தில் பணியாற்றிய மேலும் 6 பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
பாதுகாப்பான மற்றும் நேரம் தவறாத போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ஜப்பானில் இவ்வாறான ரயில் விபத்துகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.
சம்பவம் தொடர்பில் ஜப்பான் ரயில்வே நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.