ஸ்வீடனில் உள்ள மத்திய பாடசாலை ஒன்றில் வாளுடன் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
ஸ்வீடனின் ஃபாகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல்ஸ்கோலன் பாடசாலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், சந்தேக நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறையில் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் நீதித்துறை அமைச்சர் குன்னர் ஸ்டிரோம்மர் ஆகியோர் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.