நாட்டின் பல பகுதிகளில் வறட்சி: 81,000க்கும் அதிகமானோர் குடிநீரின்றி தவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Bootstrap