உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் தனது 80வது வயதில் காலமானார். குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவு குறித்த செய்தியை சகோதரியின் மகனான பிரையன் சீவர் சமூக வலைத்தளம் வாயிலாகக் குடும்பத்தினர் சார்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏழரை தசாப்தகாலமாக (70 ஆண்டுகள்) இசைப் பயணம். 10 கிராமி விருதுகளை வென்று சாதனை. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகள் விற்பனையாகியுள்ளன.
பாடல்களை எழுதுவதை ஒரு "சிகிச்சையாகவும்" தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாகவும் கருதிய அவர், தன்னை எப்போதுமே முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டார்.
இசையைத் தாண்டி நடிப்பு, தொழில்முனைவு மற்றும் அறக்கட்டளைப் பணிகளிலும் சிறந்த தடம் பதித்தார். குறிப்பாக, 'Imagination Library' என்ற திட்டத்தின் வாயிலாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை வழங்கிப் பெரும் சமூகச் சேவையாற்றினார்.
இசைக்கும் மனிதநேயத்திற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பால் "கன்ட்ரி இசையின் ராணி" எனப் போற்றப்பட்ட டோலி பார்ட்டனின் மறைவு, சர்வதேச இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.