பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், மெட்டா நிறுவனம் அமெரிக்காவின் பல மாகாணங்களுடன் பல பில்லியன் டொலர் மதிப்பிலான சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, இளம் வயதினரின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த மெட்டா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இளம் வயதினருக்கான தினசரி பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் இரவு நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் சமூக வலைத்தளப் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.