நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக காணாமல் போயுள்ளவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக நேபாளக் காவல்துறை அறிவித்துள்ளது.
அத்துடன், காணாமல் போயுள்ளவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 113 நேபாள நாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகளை நேபாளப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்