துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான முன்னாள் ICE அதிகாரி டெக்சாஸ் அதிகாரிகளால் விடுதலை

மினசோட்டாவில் (Minnesota) நடைபெற்ற குடிவரவு சோதனையின் போது, வெனிசுலாவைச் சேர்ந்த ஜூலியோ சேசர் சோசா-செலிஸ் (Julio Cesar Sosa-Celis) என்பவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரி கிறிஸ்தியான் காஸ்ட்ரோ (Christian Castro), டெக்சாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

 டெக்சாஸ் சட்டப்படி, நாடுகடத்தல் உத்தரவு பெறப்பட்ட நபரை 90 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. அந்த கெடு முடிந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

மினசோட்டா மாநிலத்தின் நாடுகடத்தல் கோரிக்கையை நிறைவேற்றக் கோரும் ஆவணத்தில் டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) கையெழுத்திட மறுத்துவிட்டார்.

 மினசோட்டா அதிகாரிகள் காஸ்ட்ரோ நாட்டிலிருந்து தப்பித்து மெக்சிகோவிற்குச் செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும், கூட்டாட்சி நீதிபதி இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார்.

Bootstrap