கடந்த இரு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74,000 ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 25 ஆயிரத்து 310 ஆகும்.
அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
அதேவேளை, நேற்று (27) 1,61,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 41 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.