வெனிசுவேலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்தில் பெரும்பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலையை குறைப்பதே நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வெனிசுவேலாவின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.