தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அவருக்கு 'Z+' பிரிவின் கீழ் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது அந்தப் பாதுகாப்பானது 'Z' பிரிவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.