ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்

ஈரானின் லராக் (Larak) தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று (30) தாக்குதல் நடத்தியுள்ளன.

கடந்த ஜூலை மாத இறுதிக்கு பின்னர் ஈரானிய நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தும் நேரடி இராணுவத் தாக்குதல் இதுவாகும்.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை பொருத்துவதற்காக ஈரானியப் புரட்சிகர காவல்படை ஏவுகணைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்ததை அடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில்சில இராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்களும் புரட்சிகர காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Bootstrap