வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்

வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் பெற்றதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை தமிழக வெற்றிக்கழகம் மாற்றியுள்ளது என்று திண்டுக்கல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் நிலை குறைய வேண்டும் என்றும். குடும்பப் பிரச்சினைகளால் பெற்றோர்களைப் பிரித்து வைக்கும் போக்கு மாற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னைய காலங்களைப் போல் அல்லாமல், இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Bootstrap