சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற நேபாளம் மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

பயங்கர வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம், சீனாவிடம் இருந்து காலநிலை மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தரவுகளைப் பெற மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

நேபாள-திபெத் எல்லையில் உள்ள பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, இரு நாட்டு நிபுணர்களும் அதிகாரிகளும் காத்மாண்டுவில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தனர்.

பனிப்பாறை மாற்றங்கள் மற்றும் நீரின் மட்டம் குறித்த முன்னெச்சரிக்கைத் தரவுகளை சீனாவிடம் இருந்து போதுமான அளவு பெற முடியவில்லை என்றும், இது போன்ற பேரிடர்களை முன்கூட்டியே எதிர்கொள்ள இது தடையாக இருப்பதாகவும் நேபாள நீரியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளில் நேபாளத்துடன் தாங்கள் நல்லுறவைப் பேணி வருவதாகவும், சரியான நேரத்தில் முக்கியத் தரவுகளைப் பகிர்ந்துள்ளதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் தூதரகமும் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில் இது போன்ற பேரிடர்களைத் தவிர்க்க, இந்தியாவின் நீர்வளத் தரவுப் பகிர்வு ஒப்பந்தத்தைப் போல, சீனாவுடனும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தரவுகளைப் பெறும் முறையை ஏற்படுத்த நேபாளம் திட்டமிட்டுள்ளது.

Bootstrap