காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு சாதாரண இயற்கைப் பேரிடர் அல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், பருவநிலை மாற்றத்தால் இவ்வாறான அனர்த்தங்களின் அபாயம் அதிகரித்து வருவதால் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பனிச்சரிவுக்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகவில்லை என்றாலும், புவி வெப்பமடைதல் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதுடன், எதிர்காலத்தில் இத்தகைய பேரழிவுகளின் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இமயமலைப் பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

Bootstrap