தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus) பெயர் பரிந்துரைக்கும் வாய்ப்பு விலங்கு நல ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பிறந்த இந்தக் குட்டி நீர்யானைக்குப் பொருத்தமான பெயர்களை இணையவழிப் படிவம் (Online Form) மூலமாகச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், ஒதுக்கப்பட்ட இணையவழிப் படிவத்தின் மூலம் தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.
மிருகக்காட்சிசாலையின் இந்தப் புதிய வரவை, வரவேற்பதில் பொதுமக்களை, குறிப்பாக விலங்கு பிரியர்களை ஊக்கப்படுத்துவதையே இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் பெயர்ப் பரிந்துரைகளை அதிகாரப்பூர்வ இணையவழிப் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்: https://forms.gle/TE1LVndMqtBMva1fA