கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் காயம்

கொள்ளுப்பிட்டி, 6ஆவது தெருவில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Bootstrap