கென்யாவில் டாடா நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கென்யா நாட்டின் அதிபராக இருக்கும் வில்லியம் ரூட்டோ, கஜியாடோ மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற 'டாடா கெமிக்கல்ஸ்' நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'மகாடி சோடா', கென்யாவில் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக அந்தப் பகுதியில் கனிம வளங்களை எடுத்து வருகிறது.

ஆனால், இவ்வளவு நீண்ட காலமாக ஒப்பந்த உரிமையை வைத்திருந்தும், உள்ளூர் மக்களுக்கோ அல்லது அந்த சமூகத்திற்கோ எந்தவித பயனும் கிடைக்கவில்லை என்பதுதான் கென்யா அரசின் இந்த உத்தரவுக்கு காரணமாக அமைந்துள்ளது. கஜியாடோ பகுதியில் இந்த நிறுவனம் இதுவரை எந்தவிதமான பெரிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை என்றும் அதிபர் ரூட்டோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தச் மோதல் திடீரென உருவானது அல்ல. கடந்த ஜூலை மாதத்திலேயே, அரசாங்கம் தனது மகாடி சோடா செயல்பாடுகளை முடக்கியுள்ளதாகவும், சோடா சாம்பல் (Soda Ash) ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நூற்றாண்டில் அதிவேகமாக வளர்ந்த ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம், உள்ளூர் மக்களின் சமூக மேம்பாட்டைப் புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Bootstrap