ஈரானின் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஐந்து கப்பல்களை தாம் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது பெலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இருமுறை தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்துஇ இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் இருந்த ஆஃவு கவிஸ் (M/T Kaviz), ஆஃவு சார்மினார் (M/T Charminar) , ஆஃவு ஹொரைசன் 1 (M/T u;orizon 1) மற்றும் ஆஃவு றியெஸ்கோ (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கர்க் தீவு அருகே இருந்த ஆஃவு டெர்யா (M/T Derya) கப்பலையும் தாக்கழித்துள்ளதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
தாக்குதலுக்கு முன்பு கப்பல்களில் இருந்த பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்த செய்தி தொடர்பில் ஈரான் தரப்பு இன்னும் பதில் வழங்கவில்லை.