காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, காப்புரிமை தொடர்பான உத்தரவை மீறி தனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாடல்களின் காப்புரிமையை நிர்வகித்து வரும் சரிகம நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில், காப்புரிமை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையில், இளையராஜா தரப்பின் பதில் மற்றும் காப்புரிமை தொடர்பான சட்டரீதியான வாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap