சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு தகவல் சற்றே யோசிக்க வைத்துள்ளது.
அத்துடன், பொதுவாகவே உலக நாடுகள் பலவற்றில், சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது வாகனங்களின் டயர்கள் தேய்வதால் எக்கச்சக்கமான அளவில் ரப்பர் துகள்கள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.
இந்த ரப்பர் துகள்கள், காற்று, தண்ணீர் மற்றும் உரம் வாயிலாக விவசாய நிலத்தை அடைந்து உணவுச்சங்கியில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தாலும், இந்த ரசாயனங்களால் மனித உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிய மேலதிக ஆய்வுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.