கேகாலையின் -புலத்கோஹுபிட்டிய (Bulathkohupitiya) பகுதியிலுள்ள டெடுகல (Dedugala) கிராமத்தின் வீடு ஒன்றுக்குள் நுழைந்த முழு வளர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, எவ்விதப் பாதிப்புமின்றி மீட்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலத்கோஹுபிட்டிய அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, கால்நடை மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் அந்த சிறுத்தையை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்த இடத்திலிருந்து சிறுத்தையை மீட்ட பிறகு, அதனை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுத்தை ரந்தெனிகல வனவிலங்கு சுகாதார முகாமைத்துவப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் தற்போது அதற்குத் தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதுடன், அதனைப் பொருத்தமான சூழலில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.