புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 21 உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் வரவேற்கத் தக்க விடயம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன்(A.Sarveshwaran) தெரிவித்தார்.
இதன் மூலமாக பல்வேறு நிதி வீண் விரயங்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பிலும், இலங்கை குறித்து இந்தியாவின் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பிலும் பேராசிரியர் இதன்போது தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது