யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் இன்று (14.07.2025) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.