இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
வரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட வர்த்தக பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அறிக்கையை கனடா தவறாக மேற்கோள் காட்டியதாக குற்றம் சாட்டிய பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல் | No More Trade Talks With Canada Trump
இது தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க வரிகளை விமர்சிக்க கனடா பயன்படுத்திய விளம்பரத்தில் ரொனால்ட் ரீகனின் அறிக்கை தவறாகவும், சூழலுக்கு புறம்பாகவும் வழங்கப்பட்டதாக ட்ரம்ப் கூறுகிறார்.
கனடா மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், இந்த நடவடிக்கையை "வர்த்தக உறவுக்கு கடுமையான அவமரியாதை" என்றும், "முன்னாள் ஜனாதிபதியை தவறாக மேற்கோள் காட்டி உண்மையைத் திரிக்க எங்கள் நட்பு நாடு முயற்சித்தால் பேச்சுவார்த்தைகளை நாங்கள் தொடர முடியாது" என்றும் கூறியுள்ளார்.
இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது, மேலும் கனடா எவ்வாறு பதிலளிக்கும் என்பதில் உலகின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் கனேடிய அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை.