ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஆதரவு இருப்பதாக டெலோ (Telo) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதற்கான ஒரு சாதகமான சூழல் உருவாகி வருகிறது.

இந்த விசாரணைகள் மற்றும் அதன் ஊடாக வெளிவரும் உண்மைகள், ஜனாதிபதி மீதான நம்பிக்கையைத் தமிழ் மக்களிடையே அதிகரித்துள்ளன.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பே ஜனாதிபதிக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதற்கான முக்கிய காரணமாகும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Bootstrap