நாளை (20) முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, குறித்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.