நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் சுற்றுவட்டத்துக்கு அருகில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Bootstrap