அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வழக்கம் போல் ஊடகங்கள் முன்பாக அல்லாமல், மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு நேர்மறையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் இன்றி இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய இரகசிய அணுசக்தி நிலையம் பிகாக்ஸ் மலை பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இந்தநிலையில் தமது சந்திப்பு மிகவும் சிறப்பானது என்று நெதன்யாகு வர்ணித்துள்ளார்.
இஸ்ரேலில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்புடன் தன்னை இணைத்துக் கொண்டு பேசுவதன் மூலம் தனது அரசியல் நிலையை வலுப்படுத்த நெதன்யாகு முற்படுவதாகக் கூறப்படுகிறது.