இந்தியாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, எச்.ஐ.வி தொற்று தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap