இலங்கை :மஹர ஊரடங்கு தொடர்ந்து அமுலில்

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், நேற்று இரவு முதல் அமுலான பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அண்மையில் இருக்கும் பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.

Bootstrap