ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயா (Kudrinskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்தில் அந்த நாட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிபொருட்களை ஏந்தி வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அவரைப் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாகவும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சமயத்தில் வெடிபொருள் வெடித்ததில், குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நடந்த போது ஒரு தனியார் நிகழ்வு நடந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர் யார் என்பது குறித்தோ அல்லது நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களின் விவரங்கள் குறித்தோ அதிகாரிகளால் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.