அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமுலுக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் இன்னும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் முறையான வயது சரிபார்ப்பு முறைகளை நடைமுறைப்படுத்த தவறியதே இதற்கு காரணம் என வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், கணக்கெடுப்பில் பங்கேற்ற சிறுவர்களில் 86 சதவீதம் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகும் அந்த எண்ணிக்கை 81 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
கணக்குகளை தொடர்ந்து வைத்துள்ள சிறுவர்களில் பலர், தளங்கள் தங்களின் வயதை சரிபார்க்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
சிலர் தங்களின் வயதை 16க்கு மேல் என மாற்றியமைத்தும், முறையற்ற வயது சரிபார்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தியும் கட்டுப்பாடுகளைத் தடுத்துள்ளனர்.
எனினும், இந்த தடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த சட்டம் பெற்றோர் மத்தியிலான விவாதங்களில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல மில்லியன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.