இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.

271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகசார் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

எனினும், படகில் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

காணாமல் போனவர்களை மீட்கும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Bootstrap