வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.