பாங்காங்: கடந்த 2021ம் ஆண்டு மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், ஆங் சாங் சூகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதியை சந்தித்ததாக அரசு தெரிவித்துள்ளது.அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.