2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (05) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் பரீட்சைக்கு தோற்றவிருந்த ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.