தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.