இலங்கையில் தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில சாட்சிகள் இரவு வேளைகளிலும் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுவதே இம்முறையீட்டு வழக்கின் சிறப்பம்சமாகும்.

இந்த வழக்கு விசாரணை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலானதாகும்.

முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உட்பட 24 முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பல தீர்க்கமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Bootstrap