ரஷ்ய தாக்குதலில் கெய்வ் நகரில் குறைந்தது 20 பேர் உயிரிழப்பு

ரஷ்ய படைகள் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drones) தாக்குதலில் உக்ரைனின் தலைநகரான கெய்வ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பயங்கர தாக்குதலால் பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இத்தகைய தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சர்வதேச நாடுகளிடம் இருந்து கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense Systems) உக்ரைனுக்கு உடனடியாக தேவைப்படுவதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Bootstrap