குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலையால் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட காவல்துறை அதிரடிப்படையினரும், கலகத்தடுப்பு பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.