பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம்

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின் கண்கவர் காட்சியை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் அனில் மேனன், இந்த அரிய இயற்கைக் காட்சியை ஐபோன் மூலம் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் ஒளிரும் துருவ ஒளியின் இந்த அழகிய காட்சி, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, அனில் மேனன் பகிர்ந்துள்ள இந்தக் காணொளி மற்றும் நிழற்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Bootstrap