முன்னாள் டொராண்டோ விமானப் பணிப்பெண் ஒருவர், தன்னை ஒரு விமானி (Pilot) போல போலி அடையாள அட்டையை உருவாக்கி காட்டி, நூற்றுக்கணக்கான இலவச விமானப் பயணங்களை மேற்கொண்டதற்காக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் கம்பிச் சுருள் மோசடி (Wire fraud) குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
டொராண்டோவைச் சேர்ந்த 33 வயதான டல்லாஸ் போகோர்னிக் (Dallas Pokornik) என்ற நபர், பனாமாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். ஜனவரி 2020 முதல் அக்டோபர் 2024 வரை, போலியான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலவச விமானப் பயணங்களைப் பெற்றுள்ளார். மேலும், விமானிகளின் காக்பிட்டில் (Cockpit) உள்ள கூடுதல் இருக்கையை (Jump seat) கோரியும் பயணம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த மோசடி வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2,50,000 அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹோனோலுலு, சிகாகோ மற்றும் ஃபோர்ட் வொர்த் ஆகிய இடங்களை தளமாகக் கொண்ட 3 அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 8 அன்று அறிவிக்கப்பட உள்ளன.