கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ

காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக 21,400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் 11,000 பேர் வெளியேற்ற எச்சரிக்கை அறிவிப்பின் கீழ்  வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் மாகாண அரசு சுமார் 1,000 ஹோட்டல் அறைகளைப் பாதுகாப்பாக ஒதுக்கியுள்ளது.

சம்மர்லேண்ட் (Summerland) அருகே தீவிரமடைந்து வரும் 'பால்ட் ரேஞ்ச்' (Bald Range) காட்டுத்தீயிலிருந்து குடும்பத்துடன் தப்பிக்க முயன்ற 80 வயதுப் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மெக்சிகோவிலிருந்து 100 தீயணைப்பு வீரர்கள் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்துள்ளனர். மேலும் கனடிய ராணுவமும் அவசர உதவிக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் மத்திய பகுதிகள் மற்றும் ஒகநாகன் (Okanagan) பகுதிகளில் வறண்ட இடி மின்னல் (Dry Lightning) காரணமாகப் புதிய காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளதாகப் பி.சி. காட்டுத்தீ சேவை மையம் எச்சரித்துள்ளது. காட்டுத்தீயின் அடர்ந்த புகையால் தெற்கு பி.சி. பகுதிகள் முழுவதும் கடுமையான காற்றுத் தர எச்சரிக்கை (Air Quality Warning) விடுக்கப்பட்டுள்ளது.

Bootstrap