விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதா என்பது குறித்து அமுலாக்கத்துறை தெளிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில் இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல் முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap