ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் கல்வி பயின்று வந்த 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.