'யாருக்கும் தீங்கு செய்யாத தேவதை': உயிரிழந்த 4 வயது சிறுமி குறித்து தாய் நெகிழ்ச்சி

மணிட்டோபாவில் உள்ள லாங் பிளைன் ஃபர்ஸ்ட் நேஷன் (Long Plain First Nation) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 4 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

 உயிரிழந்த சிறுமி குறித்து அவரது தாய் கூறுகையில், "அவள் தனது தங்கைகளுக்குக் கூட ஒருபோதும் தீங்கு செய்யாத ஒரு தேவதை. இந்த மாதத்துடன் அவளுக்கு 5 வயது பூர்த்தியாகி பள்ளிக்குச் செல்ல வேண்டியவள்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவத்தின் போது சிறுமியின் 1 மற்றும் 2 வயதுடைய இரு தங்கைகளும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் சீரான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

இச்சம்பவம் நடந்தபோது குழந்தைகள் தாயாரின் வீட்டில் இருக்கவில்லை. அவர்கள் மணிட்டோபா குழந்தை மற்றும் குடும்ப சேவைகள் (Child and Family Services) அமைப்பின் பராமரிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 அரசுக் குழந்தைகள் நலத்துறை மற்றும் மணிட்டோபா காவல்துறையின் (RCMP) குற்றப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bootstrap