அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார்.

தற்போது ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அனிருத், “இசையமைப்பதற்காக எனக்கு மிகப்பெரிய வேதனம் வழங்கப்படுகிறது. எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்று உணர்ந்தால், அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அங்கிருந்து வெளியேறிவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு திரைப்படத்தைப் பார்க்க 10 பேர் திரையரங்கிற்கு வந்தால், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் அந்த எண்ணிக்கையை 13 அல்லது 14 ஆக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.

Bootstrap