இந்தோனேசியாவின் புளோரஸ் (Flores) தீவுப் பகுதியில் சனிக்கிழமை (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கரையோரப் பகுதிகளுக்கு உடனடியாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகமை (BMKG) முதலில் சுனாமி எச்சரிக்கை விடுத்த போதிலும், கடல் மட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் தற்போது சுனாமி எச்சரிக்கையை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் நீடிப்பதால், பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.