இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!

இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, மது வரி வருவாயை விடவும் அதிகமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alcohol & Drug Information Center - ADIC) தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 335 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மதுபான வரியாக 254 பில்லியன் ரூபா மட்டுமே அரசாங்கத்தினால் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய, வரியாகக் கிடைத்த வருமானத்தை விட மதுபானப் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான செலவு 81 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் காணப்படுகின்றது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Bootstrap