கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள்

சென்னை எண்ணூர் கழிமுகம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலவகையான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து நீரில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் உயிரிழப்பால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததே மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே, சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நீர் மற்றும் உயிரிழந்த மீன்களின் மாதிரிகளைப் பரிசோதிக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Bootstrap